search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதுகுளத்தூர் மணல் கொள்ளை"

    முதுகுளத்தூர் அருகே குடிமராமத்து என்ற பெயரில் கண்மாய்களில் மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது. #Sandrobbery

    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் பெரிய கண்மாய் 64 லட்ச ரூபாய் குடிமராமத்து திட்டத்தின்கீழ் மராமத்து செய்யப்பட்டு வருகிறது. மராமத்து பணியின்போது தண்ணீர் தேங்கும் கண்மாய் பகுதிகளை 3 அடி ஆழத்திலும், கரைகளையும் பலப்படுத்த வேண்டும்.

    ஆனால் கண்மாய் மராமத்து பணிகள் பெயரளவில் மட்டுமே சீரமைக்கபட்டு, மணல் உள்ள பகுதிகளில் மணலை பொதுப்பணித்துறையினரின் அனுமதியோடு, குவியலாக எடுத்து, இரவு நேரங்களில் விற்பனை செய்கின்றனர்.

    இதனால் கண்மாயின் சில பகுதிகள் 40 அடிக்கும் ஆழமாக தோண்டப்பட்டு, விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதலபாதாளத்தில் உள்ளது. கண்மாய் மராமத்து பணிகளை முறையாக பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

    அதேபோல் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×